Monday, June 15, 2009

11 நாடுகள் அகமுடையார் உறவின்முறை சங்கம்

இந்த ஊருக்கென்று ஒரு சில கட்டுப்பாடுகள் இருக்கு அது என்னன்னா இந்த ஊரைச்சுத்தி
ஆவணம்,
நெடுவாசல்,
வேம்பன்குடி-பைங்கால்,
களத்தூர்,
தென்னன்குடி,
நாடியம்,
குருவிக்கரம்பை,

இப்படிஒரு 11 ஊர் இருக்கு இந்த 11 ஊர் மக்களுக்கும் இந்த 11 ஊருக்குள்ளதான் சொந்தபந்தங்கள் இருப்பாங்க வேற வெளியில எந்த ஊர்லயும் இருக்கமாட்டங்க ஏன்னா இந்த 11 ஊருக்குள்ளதான் எந்த ஒரு பொண்ணுக்கும் மாப்பிள்ளை பாக்கணும் அதேமாதிரி மாப்பிள்ளைக்கும் பொண்ணு பாக்கணும் வேற வெளியில பாக்கக்குடாது பொண்ணு எடுக்குறதும், கொடுக்குறதும் அந்த 11 ஊருக்குள்ளதான்..... இது நம்ம........முன்னோர்கள் காலத்திலேருந்து.. தொடர்ந்து... வந்திட்ருக்கு..... so, நாம அந்த 11 ஊர்ல எந்த ஊருக்கு... போனாலும்.. அங்க இருக்குறவங்க எதாவது ஓர் வகையில நமக்கு...சொந்தமா இருப்பாங்க.... இதுதான்.எங்க..ஊரோட....ஸ்பெஷல்...அதற்கு..ஒரு சங்கம் இருக்கு....அதோட...பேரு...11 நாடுகள் அகமுடையார் உறவின்முறை சங்கம் இந்த 11 ..ஊருக்குள்ளருந்து பிழைப்புக்காக...சென்னைக்கு...வந்து.. குடும்பத்தோட....செட்டில் ஆனவங்க.....முக்கால்வாசி பேர் இருக்காங்க.....இவங்க..எல்லாரும்...ஒரு நாள் ஒன்னா சேந்து ஒரு விழா எடுப்பாங்க அதுதான்....11 நாடுகள் அகமுடையார் உறவின்முறை.. சங்க..கூட்டம்...... சென்னைக்கு பக்கத்தில இருக்குற முட்டுக்காட்டுல வருசா வருஷம் நடத்துவாங்க அங்க எல்லா சொந்தக்கரங்களையும் ஒன்னா ஒரே இடத்துல பாக்குறது ரொம்ப சந்தோசமா இருக்கும்....

வேம்பங்குடி - சிறு குறிப்பு




நா இத சொல்லியே ஆகனும்........இங்க யாரும் இப்படி ஒரு அழகான ஊர பாத்திருக்க மாட்டாங்க.... ..ஆமா!....வேம்பன்குடி அவ்ளோ அழகு....... சொர்க்கமே இருந்தாலும் எனக்கு அது வேம்பங்குடி மாதிரி எந்த ஊரும் வராது ....அதுவும் நம்ம வேம்பங்குடி மாதிரி ஒரு பரிசுத்தமான கிராமம் வரவே ....வராதுங்க.....நம்ம ஊர பத்தி சொல்லபோனா நிறையா சொல்லலாம்......கொஞ்சம் கொஞ்சமா தெரிஞ்சிகுவோம்.............புதுக்கோட்டை மாவட்டத்தில...இந்த ஊர் ....இருக்கு....கீரமங்கலம்...என்கிற ஊர்லருந்து ஒரு பத்து நிமிஷம் travel பண்ணா ...அங்க போய்டலாம்....அந்த ஊருக்கு ஒரே ஒரு பஸ்தாங்க இருக்கு.... ஊருக்கு நடுவுல வீரமகா காளிஅம்மன் இருக்காங்க....அவங்க நம்ம best friend.........அவங்கதான் நம்ம ஊர காக்குற தெய்வம்..........ரொம்ப சக்தி வாய்ந்தவள்.....வைகாசி மாதம் விசாக திருவிழா ரொம்ப விசேஷம் .....அந்த நேரத்துல அம்மனும், ஊர் மக்களும் ரொம்ப சந்தோஷமா இருப்பாங்க.......அப்பறம் இங்க விவசாயம்தான் முதன்மை தொழில்.....அதற்கடுத்து...தேங்காய், கடலை... கரும்பு...வியாபாரம்.......உண்மையிலேயே...இந்த மாதிரி ஒரு அழகான கிராமத்தில பொறந்ததுக்கு நா ரொம்பவே பெருமைபட்றேன்....அங்க இருக்கற ஒவ்வொரு ....நாளும் மனசுக்கு ரொம்ப சந்தோஷமா....இருக்கும்..... எங்க...பாத்தாலும் ஒரே பசுமை..நிறைஞ்சிருக்கும்.......அதே மாதிரி மக்களும் ரொம்ப அன்பா பழகுவாங்க.



பைங்கால்
இந்த நேரத்தில பைங்கால் பத்தியும் இங்க சொல்லணும் ஏனா இதுதான் எங்க சொந்த ஊரு....வேம்பங்குடியோட பைங்கால்தான் ரொம்ப பசுமையா எங்க பார்த்தாலும் கண்களுக்கு குளிர்ச்சியா இற்கும் நல்ல பாசமான மக்கள்.... இந்த ஊரோட சிறப்பு என்னன்னா ஸ்கூல் தான்...அதுவும் ரொம்ப அழகா இற்கும்...என்ன இர்ந்தாலும் வேம்பங்குடி அளவுக்கு பைங்கால் பிடிக்காது...ரொம்ப பிடிச்சது பொங்கல் விளையாட்டுப்போட்டிதான் இந்த ஊர்ல சிறப்பர்க்கும்.