Sunday, February 14, 2010

வைகாசி விசாக திருவிழா














இநத அம்மன் திருவிழாதான் ரொம்ப ஸ்பெஷல் எங்க ஊர்ல இது ஒரு பத்து நாள் நடக்கும். அந்த 11 ஊர்ல எங்க ஊர்லயும், ஆவணம் என்கிற ஊர்லயும் தான் வருஷ வருஷம் நடக்கும். ரொம்ப விஷேசம இருக்கும். ரொம்ப enjoyable. இது வைகாசி மாதம் விசாக நட்சத்திரம் பாத்து வளர் பிறையில காப்பு கட்டுவாங்க. அதுக்கப்புறம் அப்டியே திருவிழா தொடங்கிடும்... ஒரு புதன் கிழமை முளைப்பாரி அப்புறம் காவடி, பால்குடம், அப்புறம் அடுத்த புதன் கிழமை பாலேடுப்பு விழா அதற்கடுத்த நாள் மஞ்சள் தண்ணி விளையாட்டு ..அதோட திருவிழா முடிஞ்சிடும்....

Thursday, January 7, 2010

பொங்கல் 2010







பொங்கல் திருநாள்
பொங்கல், இது நகரத்தை விட கிராமங்கள்ல ரொம்ப சிறப்பா கொண்டாடுவாங்க. பொங்கல் வர ஒரு வாரம் முன்னாடியே கிராமத்து அம்மக்களுக்கு நிறையவே வேலை வந்திடும். வீடு சுத்தம் பன்றதில ஆரம்பிச்சு, புதுசா அறுவடை பண்ண நெல்லை வெயில்ல காய வெச்சு அத அரைச்சு சுத்தம் பண்ணி பச்சரசியாக்கி, அப்புறம் புது மண் பானை வாங்கி இப்டி பொங்கல் முடியற வர அவங்க ஒரே பிஸியா இருப்பாங்க...எங்க ஊர்ல எப்பவும் சாயந்திரமா பொங்கல் வெப்பாங்க...பொங்கல் அன்னைக்கு வாசல்ல முதல்ல அடுப்பு வெட்டுவாங்க, அப்புறம் வாசலுக்கு நடுவுல கலர் கோலம் போட்டு அதுக்கு நடுவுல சாணத்துல பிள்ளையார் செஞ்சு அதில ஒரு பரங்கி பூவ நட்டு அப்புறம் அதுக்கு பக்கத்தில கரும்ப செங்குத்தா வெச்சிருவாங்க...ஒவ்வொரு வீட்லயும் இத பாக்கும்போது செமையா இருக்கும்...அப்றமா பொங்கல் ரெடியான பிறகு அதை அந்த வாசல் பிள்ளையாருக்கு முன்னாடி வெச்சு படைச்சு எல்லாரும் சாமி கும்பிட்டுட்டு சாப்டுவோம் இதெல்லாம் எவ்ளோ அற்புதமான தருணங்கள்.....இந்த நகரத்தில சும்மா ஒரு உப்பு சப்பு இல்லாத ஒரு பொங்கல செஞ்சு சாப்டுட்டு அப்புறம் சினிமா, பீச்னு எங்காச்சும் போய்ட்டு வர்ரதுல பொங்கல் முடிஞ்சுடுது ....என்ன இருந்தாலும் நம்ம ஊரையும், அங்க கொண்டாடுற விழாக்களையும் அடுச்சுக்க முடியாது.....

மாட்டுப்பொங்கல்
இந்த நாள்ல அப்பாக்களுக்கு வேலை இருக்கும் எப்டின்னா மாடுகள ஆறு இல்லனா ஏரிகளுக்கு எடுத்துட்டு போய் குளிப்பாட்டி அதன் கொம்புகள சரி பண்ணி நல்ல பெயிண்ட் அடிச்சு அழகு படுத்தி வீட்ல ஓய்வு எடுக்க விட்ருவாங்க...இந்த நாள்தான் அந்த ஜீவராசிகள் ஓயவேடுக்கற நாள்.....இந்த நாள்ல இளைஞர்கள் சேர்ந்து விளையாட்டுபோட்டி நடத்துவாங்க....அன்னைக்கு சாயந்திரம் கோவில் திடல்ல பெரிய நீளமான அடுப்பு வெட்டி அதில ஊர் மக்கள் எல்லாரும் பொங்கல் வெப்பாங்க .....பொங்கல் ரெடியான பிறகு எல்லாரோட பொங்கல்ல இருந்து கொஞ்ச அளவு எடுத்து சாமிக்கு படைக்கிற பெரிய இலையில போட்டு அதோட தேங்காய் பழம் போட்டு சாமிக்கு படைப்பாங்க. அப்பரம் அத பிரசாதமா எல்லார்க்கும் தருவாங்க. சாமிக்கு படைக்கும் போது எல்லாரும் சேர்ந்து ' ஆடு மாடு புள்ளக்குட்டி நல்லாருக்க பொங்கலோ பொங்கல்னு கத்துவாங்க இத கேக்க ரொம்ப காமெடியா இருக்கும். அப்பறம் வீடுகள்ல இருக்கற மாடுகளுக்கு அந்த பிரசாதத்த தருவோம்....

காணும் பொங்கல்
இன்னக்கு மாடுகள குளிப்பாட்டி அது கழுத்துல தேங்காய் கரும்ப கட்டி முதல் நாள் பொங்கல் வெச்ச அடுப்ப தாண்டி மாடுகள குட்டிட்டு வரணும் அப்படி தாண்டின உடனே மாடுகளுக்கு கட்டிருக்கிற தேங்காய் கரும்ப அருக்கனும் அதுதான் விளையாட்டு....அது ஒரு வீர விளையாட்டுன்னு வெச்சுக்கலாம்....இதில பெரிய காமெடி என்னன்னா ...மாடு அடுப்ப தாண்டும் போது பசங்க பட்டாசு கொளுத்தி போட்ருவாங்க அந்த சத்தத்த கேட்டு பல மாடு ஓட்டிட்டு வந்தவங்கள இழுத்து தள்ளிட்டு வெறிச்சு ஓடிடும்.......

Monday, June 15, 2009

11 நாடுகள் அகமுடையார் உறவின்முறை சங்கம்

இந்த ஊருக்கென்று ஒரு சில கட்டுப்பாடுகள் இருக்கு அது என்னன்னா இந்த ஊரைச்சுத்தி
ஆவணம்,
நெடுவாசல்,
வேம்பன்குடி-பைங்கால்,
களத்தூர்,
தென்னன்குடி,
நாடியம்,
குருவிக்கரம்பை,

இப்படிஒரு 11 ஊர் இருக்கு இந்த 11 ஊர் மக்களுக்கும் இந்த 11 ஊருக்குள்ளதான் சொந்தபந்தங்கள் இருப்பாங்க வேற வெளியில எந்த ஊர்லயும் இருக்கமாட்டங்க ஏன்னா இந்த 11 ஊருக்குள்ளதான் எந்த ஒரு பொண்ணுக்கும் மாப்பிள்ளை பாக்கணும் அதேமாதிரி மாப்பிள்ளைக்கும் பொண்ணு பாக்கணும் வேற வெளியில பாக்கக்குடாது பொண்ணு எடுக்குறதும், கொடுக்குறதும் அந்த 11 ஊருக்குள்ளதான்..... இது நம்ம........முன்னோர்கள் காலத்திலேருந்து.. தொடர்ந்து... வந்திட்ருக்கு..... so, நாம அந்த 11 ஊர்ல எந்த ஊருக்கு... போனாலும்.. அங்க இருக்குறவங்க எதாவது ஓர் வகையில நமக்கு...சொந்தமா இருப்பாங்க.... இதுதான்.எங்க..ஊரோட....ஸ்பெஷல்...அதற்கு..ஒரு சங்கம் இருக்கு....அதோட...பேரு...11 நாடுகள் அகமுடையார் உறவின்முறை சங்கம் இந்த 11 ..ஊருக்குள்ளருந்து பிழைப்புக்காக...சென்னைக்கு...வந்து.. குடும்பத்தோட....செட்டில் ஆனவங்க.....முக்கால்வாசி பேர் இருக்காங்க.....இவங்க..எல்லாரும்...ஒரு நாள் ஒன்னா சேந்து ஒரு விழா எடுப்பாங்க அதுதான்....11 நாடுகள் அகமுடையார் உறவின்முறை.. சங்க..கூட்டம்...... சென்னைக்கு பக்கத்தில இருக்குற முட்டுக்காட்டுல வருசா வருஷம் நடத்துவாங்க அங்க எல்லா சொந்தக்கரங்களையும் ஒன்னா ஒரே இடத்துல பாக்குறது ரொம்ப சந்தோசமா இருக்கும்....

வேம்பங்குடி - சிறு குறிப்பு




நா இத சொல்லியே ஆகனும்........இங்க யாரும் இப்படி ஒரு அழகான ஊர பாத்திருக்க மாட்டாங்க.... ..ஆமா!....வேம்பன்குடி அவ்ளோ அழகு....... சொர்க்கமே இருந்தாலும் எனக்கு அது வேம்பங்குடி மாதிரி எந்த ஊரும் வராது ....அதுவும் நம்ம வேம்பங்குடி மாதிரி ஒரு பரிசுத்தமான கிராமம் வரவே ....வராதுங்க.....நம்ம ஊர பத்தி சொல்லபோனா நிறையா சொல்லலாம்......கொஞ்சம் கொஞ்சமா தெரிஞ்சிகுவோம்.............புதுக்கோட்டை மாவட்டத்தில...இந்த ஊர் ....இருக்கு....கீரமங்கலம்...என்கிற ஊர்லருந்து ஒரு பத்து நிமிஷம் travel பண்ணா ...அங்க போய்டலாம்....அந்த ஊருக்கு ஒரே ஒரு பஸ்தாங்க இருக்கு.... ஊருக்கு நடுவுல வீரமகா காளிஅம்மன் இருக்காங்க....அவங்க நம்ம best friend.........அவங்கதான் நம்ம ஊர காக்குற தெய்வம்..........ரொம்ப சக்தி வாய்ந்தவள்.....வைகாசி மாதம் விசாக திருவிழா ரொம்ப விசேஷம் .....அந்த நேரத்துல அம்மனும், ஊர் மக்களும் ரொம்ப சந்தோஷமா இருப்பாங்க.......அப்பறம் இங்க விவசாயம்தான் முதன்மை தொழில்.....அதற்கடுத்து...தேங்காய், கடலை... கரும்பு...வியாபாரம்.......உண்மையிலேயே...இந்த மாதிரி ஒரு அழகான கிராமத்தில பொறந்ததுக்கு நா ரொம்பவே பெருமைபட்றேன்....அங்க இருக்கற ஒவ்வொரு ....நாளும் மனசுக்கு ரொம்ப சந்தோஷமா....இருக்கும்..... எங்க...பாத்தாலும் ஒரே பசுமை..நிறைஞ்சிருக்கும்.......அதே மாதிரி மக்களும் ரொம்ப அன்பா பழகுவாங்க.



பைங்கால்
இந்த நேரத்தில பைங்கால் பத்தியும் இங்க சொல்லணும் ஏனா இதுதான் எங்க சொந்த ஊரு....வேம்பங்குடியோட பைங்கால்தான் ரொம்ப பசுமையா எங்க பார்த்தாலும் கண்களுக்கு குளிர்ச்சியா இற்கும் நல்ல பாசமான மக்கள்.... இந்த ஊரோட சிறப்பு என்னன்னா ஸ்கூல் தான்...அதுவும் ரொம்ப அழகா இற்கும்...என்ன இர்ந்தாலும் வேம்பங்குடி அளவுக்கு பைங்கால் பிடிக்காது...ரொம்ப பிடிச்சது பொங்கல் விளையாட்டுப்போட்டிதான் இந்த ஊர்ல சிறப்பர்க்கும்.